விலகி செல்கின்ற சந்திரன் பதினைந்தாவது நாளான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180° தூரத்தில் இருக்கும். அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது. மீண்டும் பதினைந்தாவது நாளான அமாவாசை அன்று அடுத்த 180° தூரத்தில் இருக்கும்.
அமாவாசை திதியன்று பூமியில் இருப்போருக்கு சந்திரன் தென்படாது. இவ்வாறு விலகி மறைந்து போகும் நாட்களை தேய் பிறை அல்லது கிருஷ்ண பட்சம் என்பர்.
இவ்வாறு மொத்தம் முப்பது திதிகளை கணக்கிடலாம். தமிழ் ஜோதிடம் ஒவ்வொரு திதிக்கும் ஒரு அதிபதி உண்டு என கூறுகிறது. அத்துடன், எந்த ஒரு திதியில் என்ன செய்யலாம், என்ன செய்ய கூடாது என்றும் தமிழ் ஜோதிடம் கூறுகிறது.
நல்ல பலன் தரும் திதிகள்
ஞாயிறு - அஷ்டமி, திங்கள் - நவமி, செவ்வாய் - சஷ்டி, புதன் - திரிதியை, வியாழன் - ஏகாதசி, வெள்ளி - திரயோதசி, சனி - சதுர்த்தசி ஆகிய நாட்களில் வரும் திதிகளில் நல்ல காரியம் செய்யலாம்.
நல்ல காரியங்கள் செய்ய கூடாத திதிகள்
ஞாயிறு - சதுர்த்தசி, திங்கள் - சஷ்டி, செவ்வாய் - சப்தமி, புதன் - துவிதியை, வியாழன் - அஷ்டமி, வெள்ளி - நவமி, சனி - சப்தமி ஆகிய நாட்களில் வரும் திதிகளில் சுப காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
பிதுர் கர்மம் செய்ய திதி கொடுப்பது எப்படி
திதி, திவசம், சிரார்த்தம் என்பது இறந்த உறவினர்கள், முன்னோர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஈமக்கிரியை செய்து நினைவு கூறும் தினம் ஆகும்.
திதி கொடுப்பது எப்படி என தெரிந்து கொள்வதற்கு, முதலில் ஒருவர் இறந்த ஆங்கிலத் தேதி மாதம் வருடம் நேரத்தை கொண்டு இறந்தவரின் திதி எப்போது என தமிழ் நாட்காட்டி பிரகாரம் கணித்து தெரிந்து கொள்ள வேண்டும். முன்னோர்கள் எந்த திதியில் இறந்தார்களோ அத் திதியில் பிதுர் கர்மம் செய்வது தமிழ் பண்பாட்டில் மிக முக்கியமானது.
திதி தேவதைகள்
உங்கள் பிறந்த நேரத்திற்குரிய திதியினை அறிந்து கொண்டு அத் திதி அதிபதி, திதி தெய்வங்கள், திதி தேவதைகள் எவை என அறிந்து அவர்களை வணங்குவதே சிறப்பாகும். அவ்வாறு திதியின் அதிபதியை வணங்குவதனால், பிறந்த நேரத்திற்குரிய திதியன்று வணங்குவதே அதிலும் சிறப்பாகும்.