திதி மற்றும் திதி கணிப்பு பற்றிய கேள்வி பதில்(FAQ)
1. திதி கணிப்பு கருவி (Calculator) என்பது என்ன?
இறந்தவர்களுக்கு திதி, விரத நாட்கள் மற்றும் நல்ல நேரம் காண, தமிழ் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் திதியை கணக்கிட உதவும் இலவச ஆன்லைன் கருவி இது.
2. திதி என்றால் என்ன?
திதி என்பது சூரியன் மற்றும் சந்திரனுக்கிடையே உள்ள கோண தூரம் ஆகும். சூரியனும் சந்திரனும் அமாவாசை திதியில் 0° கோணத்தில் இருப்பார்கள். சந்திரன் விலகி செல்லும் போது வளர் பிறை (சுக்கில பட்சம்), மறைந்து செல்லும் போது தேய் பிறை (கிருஷ்ண பட்சம்) எனப்படும். மொத்தம் 30 திதிகள் உள்ளன.
3. திதி எதற்காக கணிக்கப்படுகிறது?
இன்றைய திதி, இறந்தவர்களின் திதி, பிதுர் கர்மம், விரதம், நல்ல நேரம் போன்ற ஆன்மீக மற்றும் பண்பாட்டு நோக்கங்களுக்காக திதி கணிக்கப்பட்டு பயன்படுகிறது.
4. திதி கணிக்க தேவையான தகவல்கள் என்ன?
தேதி, நேரம் மற்றும் இடத்தை உள்ளிடுவதன் மூலம் அந்த நேரத்திற்குரிய திதி மற்றும் அதற்குரிய அதிபதியையும் அறிய முடியும்.
5. திதி பிதுர் கர்மத்தில் எப்படி பயன்படுகிறது?
இறந்த உறவினர்களுக்கான திதி, திவசம் அல்லது சிரார்த்தம் தினத்தை கணிக்க, அந்த நபர் இறந்த நாள், நேரம் மற்றும் இடத்தின் அடிப்படையில் திதியை கண்டறிய வேண்டும். அதே திதியில் பிதுர் கர்மம் செய்ய வேண்டும் என்பதே தமிழ் பண்பாடு.
6. வளர் பிறை மற்றும் தேய் பிறை என்றால் என்ன?
சந்திரன் சூரியனில் இருந்து விலகி செல்லும் போது வளர் பிறை (சுக்கில பட்சம்), மறைந்து செல்லும் போது தேய் பிறை (கிருஷ்ண பட்சம்) எனப்படும். பௌர்ணமி அன்று சந்திரன் 180°-இல் இருக்கும்; அமாவாசை அன்று மறைந்து காணப்படாது.
7. நல்ல காரியங்களுக்கு ஏற்ற திதிகள் எவை?
ஞாயிறு – அஷ்டமி, திங்கள் – நவமி, செவ்வாய் – சஷ்டி, புதன் – திரிதியை, வியாழன் – ஏகாதசி, வெள்ளி – திரயோதசி, சனி – சதுர்த்தசி
8. சுப நிகழ்ச்சிகளுக்கு தவிர்க்க வேண்டிய திதிகள் எவை?
, ஞாயிறு – சதுர்த்தசி, திங்கள் – சஷ்டி, செவ்வாய் – சப்தமி, புதன் – துவிதியை, வியாழன் – அஷ்டமி, வெள்ளி – நவமி, சனி – சப்தமி
9. திதி அதிபதிகள் மற்றும் தெய்வங்கள் பற்றி கூறுங்கள்.
ஒவ்வொரு திதிக்கும் ஒரு அதிபதி மற்றும் தெய்வம் இருக்கிறது. திதி அதிபதியை அறிந்து, பிறந்த நேரத்திற்குரிய திதியன்று அவர்களை வணங்குவது சிறப்பாகும்.
10. திதி கணிப்பு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்?
பழம்பெரும் தமிழ் ஜோதிடக் கொள்கைகளின் அடிப்படையில், திதியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு, அதனை ஆன்மீக மற்றும் பண்பாட்டு வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த உதவுகிறது.